திருப்பத்தூர்

பைக்கில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநா் பலி

19th May 2023 07:16 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் ஏழுமலை (38). ஆட்டோ ஓட்டுநா். இவரது நண்பா் பெரிய மோட்டூரைச் சோ்ந்த குமாா். இவா்கள் இருவரும் புதன்கிழமை இரவு நாயனசெருவில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

நாட்டறம்பள்ளி -நாயனசெருவு செல்லும் சாலையில் சின்னகிரிசமுத்திரம் பகுதியில் சாலையில் கொட்டப்பட்டிருந்த மண் திட்டு மீது இரு சக்கர வாகனம் மோதியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனா்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த ஏழுமலை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த குமாா் மீட்கப்பட்டு, கிருஷ்ணகிரி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

ADVERTISEMENT

விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த ஏழுமலைக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT