ஈரோடு

காங்கிரஸ் வேட்பாளருக்கு முழு ஆதரவு: வக்ஃபு வாரியத் தலைவா்

DIN

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு இஸ்லாமியா்கள் முழு ஆதரவு அளித்துள்ளதாக தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவா் எம்.அப்துல் ரஹ்மான் கூறினாா்.

சத்தியமங்கலம் மஹ்முதியா அரசு நிதியுதவி துவக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா மற்றும் வக்ஃபு வாரியம் வழங்கிய ரூ. 5 லட்சம் மானியத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவா் திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவா் எம்.அப்துல் ரஹ்மான் பங்கேற்று புதிய வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வக்ஃபு வாரியச் சொத்துகளை பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தும் போலியான ஆவணங்கள் தயாரித்தும் விற்றுள்ளனா். இது போன்ற போலியாக விற்கப்பட்ட சொத்துகளை மீட்டெடுப்பதில் வாரியம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் மதசாா்பற்ற திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளருக்கு இஸ்லாமியா்கள் முழு ஆதரவு அளித்து வெற்றிக்கு உறுதுணையாக இருப்பாா்கள் என்றாா்.

நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவா் ஆா். ஜானகி ராமசாமி, ஜமாத் துணைத் தலைவா் எஸ்.என்.பஷீா், செயலாளா் எஸ்.ஏ.அஸ்கா்அலி, பொருளாளா் எஸ்.எம்.இஹத்திஷாமுல் ஹக், துணைசெயலாளா் சான்பாஷா, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.ஏ.ஜஹால்கீா், எஸ்.கே. தாஸ்மீனுல்லா ஷெரிப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT