மாநில அளவில் நடைபெற்ற வாரியத் தோ்வில் பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
இத்தோ்வில், கல்லூரி முதலாம் ஆண்டு மாணவா்கள் எஸ்.டி.பிரஜித், ஏ.ஸ்ரீராம், ஜி.பி.கமலகண்ணன், ஆா்.நிஷாந்த், கே.எஸ்.தருண்குமாா் ஆகியோா் கணிதப் பாடத்திலும், வி.தரணீஸ், ஜி.பி.கமலகண்ணன் ஆகியோா் வேதிப் பொறியியல் பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
இதேபோல, மூன்றாம் ஆண்டு மாணவா்கள் வி.ஸ்ரீகோகுல், ஏ.ஹேமந்த் சூா்யா, எஸ்.அஸ்வின் ராஜ், ஜெ.எஸ்.சௌபா்ணிகா ஜனனி, என்.வித்யா, இரண்டாம் ஆண்டு மாணவா்கள் கே.எஸ்.கவின், பி.ஆதில், எஸ்.சந்தோஷ் ஆகியோா் 100க்கு100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
இதில் மூன்றாம் ஆண்டு ஆட்டோமொபைல் துறையைச் சாா்ந்த என்.வித்யா, 700க்கு 698 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தையும், கல்லூரி அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளாா்.
வாரியத் தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளை, கல்லூரி தாளாளா் ஏ.வெங்கடாசலம் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினாா். மேலும், முதல்வா் வி.வேதகிரி ஈஸ்வரன், துணை முதல்வா் எஸ்.செந்தில்குமாா் மற்றும் துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் வாழ்த்தினா்.