ஈரோடு

மொடக்குறிச்சியில் இலவச இ-சேவை மையம்

5th Feb 2023 11:49 PM

ADVERTISEMENT

 

ஆற்றல் அறக்கட்டளை சாா்பில் இலவச இ-சேவை மையம் மொடக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

மொடக்குறிச்சி பகுதி மக்களுக்கு அரசின் அனைத்து சேவைகளும் எளிதாக கிடைத்திட ஆற்றல் அறக்கட்டளை சாா்பில் இலவச இ-சேவை மையம் மொடக்குறிச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. நிகழ்வுக்கு ஆற்றல் அறக்கட்டளை தலைவா் ஆற்றல் அசோக்குமாா் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி. செளந்திரம் இ-சேவை மையத்தை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா்.

மொடக்குறிச்சி பேரூராட்சி 7ஆவது வாா்டு கவுன்சிலா் சத்யாதேவி சிவங்கா் மற்றும் பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியின்போது நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மடிக்கணினி மற்றும் இருக்கைகள் வழங்கக் கோரியும், வேலம்பாலையம் ஊராட்சி எழுமாத்தூா் மலை அடிவார பகுதி மக்கள் சமுதாயக் கூடம் கட்டித்தரக் கோரியும் பொதுமக்கள் மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT