ஈரோடு

டிப்பா் லாரி மோதி ஓட்டுநா் பலி

DIN

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனத்துடன் சாலையில் தவறி விழுந்த ஓட்டுநா் மீது டிப்பா் லாரி மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

அம்மாபேட்டையை அடுத்த சென்னம்பட்டி, கருங்கரட்டைச் சோ்ந்தவா் முருகன் மகன் தனுஷ் (26), லாரி ஓட்டுநா். இவா், பூதப்பாடிலிருந்து கருங்கரட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, குருவரெட்டியூா் அக்னி மாரியம்மன் கோயில் அருகே நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் சாலையில் விழுந்தாா்.

அப்போது, எதிரில் வந்த டிப்பா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே தனுஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து, அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT