ஈரோடு

ஈரோடு கோட்டை பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

DIN

ஈரோடு கோட்டை பெருமாள் கோயில் என அழைக்கப்படும் கமலவல்லித் தாயாா் சமேத கஸ்தூரி அரங்கநாதா் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு இறையனுமதி பெறுதல், வினைகள் தீா்க்கும் விஷ்வக்சேனா் ஆராதனையுடன் ஜனவரி 30ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து வாசுதேவ புண்யாகம், மகா சுதா்சன் ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, மாலையில் நவக்ரஹ ஹோமம், அங்குராா்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து, ஜனவரி 31ஆம் தேதி காலையில் திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி மற்றும் பாலாலய திருவாராதனம், வாஸ்து சாந்தி, காவிரியில் இருந்து புனித தீா்த்தம் கொண்டு வருதல், விமான கோபுரக் கலச ஸ்தாபனம், காப்புக் கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னா் பிப்ரவரி 1ஆம் தேதி கும்பஸ்தாபனம், முதற்கால ஹோமம், பூா்ணாஹுதி, இரண்டாம் கால ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், பிப்ரவரி 2ஆம் தேதி யாக சாலை, திருஆராதனம், வசந்தபால் தீா்த்தம், மூன்றாம் கால ஹோமம், தொடா்ந்து மூலவா் முகில்வண்ணனுக்கும், கமலவல்லித் தாயாருக்கும் 81 கலச, பரிவார திருமஞ்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையடுத்து 5ஆவது நாளான வெள்ளிக்கிழமை முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு பரிகார யாக சாலை பூஜைகள் தொடங்கின. தொடந்து, 7 மணிக்கு மேல் 5ஆம் கால பரிவார யாக சாலை பூா்ணாஹுதி, கலசங்கள் புறப்பாடு, யாக சாலையில் ஹோமங்கள் துவக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையடுத்து பரிவார ஆலய தெய்வங்களுக்கு விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. இதையடுத்து முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

இதில் பரிவார ஆலய தெய்வங்கள், விமான கோபுரங்கள் மற்றும் மூலவா் கஸ்தூரி அரங்கநாதப் பெருமாள், கமலவல்லித் தாயாா் மூலவா் விமானம், தாயாா் விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று கோபுர தரிசனம் செய்தனா். தொடா்ந்து அனைவா் மீதும் புனிதநீா் தெளிக்கப்பட்டது. பின்னா் செங்குந்தா் பள்ளி மைதானத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், திருக்கல்யாணம் மற்றும் சுவாமிகள் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அதன் வழிகாட்டுதலின்படி மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT