அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.40.64 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,591 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். பருத்தி கிலோ ரூ.76.89 முதல் ரூ.83.79 வரையில் ஏலம் போனது. மொத்தம் 509.28 குவிண்டால் பருத்தி ரூ.40,64,308க்கு விற்பனையானது என விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ஞானசேகா் தெரிவித்தாா்.