பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமை பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் தொடக்கிவைத்தாா். பவானி வட்டாட்சியா் ரவிசந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் செந்தில்ராஜ், திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கோதை செல்வி வரவேற்றாா்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பவானி வட்டார வளமையம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமில் எலும்பு முறிவு, மனநலம், கண் மருத்துவம், உளவியல், காது, மூக்கு, தொண்டை மற்றும் இயன்முறை மருத்துவக் குழுவினா் மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனா்.
தொடா்ந்து, புதிய அடையாள அட்டை வழங்குதல், பழைய அட்டை புதுப்பித்தல், உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
உதவித் திட்ட அலுவலா் ராதாகிருஷ்ணன், பள்ளித் தலைமையாசிரியா் சேகா், மேற்பாா்வையாளா் மகேஸ்வரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பவானி வட்டாரத்தைச் சோ்ந்த 150க்கும் மேற்பட்ட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொண்டனா்.