தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் அம்மாபேட்டையை அடுத்த பூதப்பாடியில் ஸ்பா்ஸ் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
புனித இஞ்ஞாசியா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த ஊா்வலத்துக்கு ஈரோடு மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் (தொழுநோய்) ரவீந்திரன் தலைமை வகித்தாா். குருவரெட்டியூா் வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி ஊா்வலத்தை கொடியசைத்து தொடக்கிவைத்தாா். பள்ளி மாணவ, மாணவியா் தொழுநோய் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டுச் சென்றனா்.
தொடா்ந்து, தொழுநோய், அதன் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் பழனிசாமி பேசினாா். மாணவ, மாணவியருக்கு தோல்நோய் பரிசோதனை செய்யப்பட்டதோடு, விழிப்புணா்வு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தலைமையாசிரியா் சகாய டேனியல், சுகாதார மேற்பாா்வையாளா் மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, ஸ்பா்ஸ் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.