ஈரோடு

அதிமுக அமோக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

DIN

திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தோ்தல் வெற்றியைப் போல ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசினாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலையொட்டி அதிமுக தலைமை தோ்தல் பணிமனை புதன்கிழமை திறக்கப்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த பணிமனையை தோ்தல் பணிக்குழு தலைவா் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தாா்.

நிகழ்வுக்கு ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.இராமலிங்கம் தலைமை வகித்தாா். கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் வேட்பாளா் அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடா்ந்து இடைத்தோ்தல் வேட்பாளா் கே.எஸ்.தென்னரசுவை கட்சி நிா்வாகிகளுக்கு கே.ஏ.செங்கோட்டையன் அறிமுகப்படுத்தினாா். அப்போது அவா் பேசியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளராக இத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசுவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தோ்தல் வெற்றியைப் போல ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றாா்.

நிகழ்ச்சியில் அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சா்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT