அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஈரோடு புறநகா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் பவானியில் சிறப்பான வரவேற்பு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
சேலத்திலிருந்து கோபிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு பவானியில் அந்தியூா் பிரிவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஈரோடு புறநகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கே.சி.கருப்பணன் தலைமை வகித்தாா். பவானி நகர அதிமுக செயலாளா் எம்.சீனிவாசன், ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.எம்.தங்கவேலு, முனியப்பன், மேகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பவானி ஒன்றியக் குழுத் தலைவா் பூங்கோதை வரதராஜ், நகர எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலாளா் எம்.ஜி.நாத் (எ) மாதையன், கூட்டுறவு சங்கத் தலைவா் பெரியசாமி உள்ளிட்ட பலா் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு தெரிவித்தனா்.