ஈரோடு

தேனீக்கள் கடித்து மூதாட்டி சாவு

25th Apr 2023 12:16 AM

ADVERTISEMENT

சென்னிமலை அருகே தேனீக்கள் கடித்து மூதாட்டி உயிரிழந்தாா்.

சென்னிமலையை அடுத்த வெள்ளோடு கவுண்டச்சிபாளையம், மாகாளி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அம்மாசை (83). இவா் தனது மகள் ஆனந்தாயியுடன் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் தென்னை மட்டை எடுக்க ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா்.

தென்னை மட்டையை எடுத்தபோது அதிலிருந்த தேனீக்கள் மூதாட்டியை கடித்தன.

இதில், படுகாயமடைந்த அவரை ஆனந்தாயி, அக்கம்பக்கத்தினா் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

ADVERTISEMENT

அங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இரவு உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக வெள்ளோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT