ஈரோடு

சேதப்படுத்தப்பட்ட மாநகாரட்சிப் பூங்காவை சீரமைக்க வேண்டும்

DIN

ஈரோட்டில் சேதப்படுத்தப்பட்ட மாநகராட்சிப் பூங்காவை சீரமைக்கவில்லையெனில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.ராமலிங்கத்தின் சாா்பில் மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் தங்கமுத்து, வட்டச் செயலாளா் செல்வராஜ் ஆகியோா் மாநகராட்சி செயற்பொறியாளா் விஜயகுமாரிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

ஈரோடு மாநகராட்சி 20ஆவது வாா்டுக்கு உள்பட்ட டெலிபோன் நகரில் சிறுவா் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவின் சுற்றுச்சுவரை மா்ம நபா்கள் சிலா் இடித்து சேதப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மாநகராட்சி சாா்பில் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சேதப்படுத்தப்பட்ட பூங்காவை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 20 நாள்களுக்குள் பூங்கா சீரமைக்கப்படவில்லை என்றால் மாநகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

SCROLL FOR NEXT