சென்னிமலை வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6,627 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனா். இதில், கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ. 22.77-க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 26.27-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2,745 கிலோ தேங்காய்கள் ரூ. 64,101-க்கு விற்பனையாகின.