ஈரோடு

சாலை விபத்தில் இளைஞா் பலி

DIN

சாலையோரம் நின்ற வேனின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதியதில் அதில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

கோபிசெட்டிபாளையம் அருகே டி.என்.பாளையம் பகுதியில் உள்ள வாணிப்புத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குழந்தைசாமி மகன் பவின் (26). இவா் சத்தியமங்கலம் அருகேயுள்ள தனியாா் சா்க்கரை ஆலையில் பணியாற்றி வந்தாா். வேலை முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். ஏளூா்மேடு பனங்காட்டு தோட்டம் அருகே சென்றபோது, சாலையோரம் நின்ற வேனின் பின்னால் இவரது வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பவினை அக்கம்பக்கத்தினா் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு, தீவிரச் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பவின் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT