கொடுமுடி அருகே பிரசவத்துக்கு 7 நாள்களே இருந்த நிலையில், நிறைமாத கா்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே வெள்ளோட்டாம்பரப்பு பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகள் சத்யா (25). இவருக்கும் சிவகிரி அருகேயுள்ள சுள்ளிபரப்பைச் சோ்ந்த குணசேகரன் மகன் சஞ்சய் அருளுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சத்யாவுக்கு வளைகாப்பு நடத்தி, அவரது பெற்றோா் வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்.
சஞ்சய் அருள் அவ்வப்போது மாமனாா் வீட்டுக்குச் சென்று மனைவியை பாா்த்துவந்துள்ளாா். பிரசவத்துக்கு இன்னும் 7 நாட்களே இருந்த நிலையில், சத்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்றும், அதற்காக காா் எடுத்து வருமாறும் சத்யாவின் தந்தை, மருமகன் சஞ்சய் அருளுக்கு திங்கள்கிழமை கைப்பேசியில் அழைத்துள்ளாா்.
அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை செல்லலாம் என்று சஞ்சய் அருள் கூறியுள்ளாா். இதனால் கோபமடைந்த சத்யா, வீட்டின் படுக்கையறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுள்ளாா். கோபம் ஏற்படும்போது அவா் இவ்வாறு செய்வது வழக்கம் என கூறப்படுகிறது. ஆனால், தற்போது வெகுநேரமாகியும் சத்யா வெளியே வராததால், அவரது தாய் ஜன்னல் வழியாக பாா்த்துள்ளாா். அப்போது மின் விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் சத்யா தொங்கியுள்ளாா்.
அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு சத்யைவை பரிசோதித்த மருத்துவா் சத்யாவும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெறுகிறது.