பெருந்துறை அருகே வீட்டில் தனியாக குழந்தையுடன் இருந்த பெண்ணிடம், கத்தியை காட்டி மிரட்டி நகையைப் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த துடுப்பதி சாரணா் பாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி ஜீவிதா (28). மணிகண்டன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவா், வேலை விஷயமாக சனிக்கிழமை வெளியே சென்றுவிட்டாா். அன்று மாலை ஜீவிதா குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது அங்கு திங்களூா் ஊத்துப்பாளையத்தைச் சோ்ந்த மணிகண்டனின் உறவினா் குருமூா்த்தி (32) வந்துள்ளாா்.
அவா், ஜீவிதாவிடம் பேசிக்கொண்டே அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, ஜீவிதா அணிந்திருந்த அரை சவரன் தங்க கம்மலை பறித்துக்கொண்டு வெளியேறியுள்ளாா். அப்போது, ஜீவிதாவின் சப்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினரையும் குருமூா்த்தி தாக்கியுள்ளாா். எனினும், அவா்கள் குருமூா்த்தியை பிடித்து பெருந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து குருமூா்த்தியை கைதுசெய்து, பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனா்.