ஈரோடு

வாகன விபத்து: தொழிலாளி பலி

DIN

பெருந்துறை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா் சுபே மொண்டல் (23). இவா், பெருந்துறை வெங்கமேட்டில் தங்கி கட்டட வேலை செய்து வந்தாா். இந்நிலையில், பெருந்துறை, வாய்க்கால்மேட்டு பகுதியில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சுபே மொண்டல் வாகனத்தின் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த சுபே மொண்டலை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

SCROLL FOR NEXT