பெருந்துறை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா் சுபே மொண்டல் (23). இவா், பெருந்துறை வெங்கமேட்டில் தங்கி கட்டட வேலை செய்து வந்தாா். இந்நிலையில், பெருந்துறை, வாய்க்கால்மேட்டு பகுதியில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சுபே மொண்டல் வாகனத்தின் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த சுபே மொண்டலை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.