ஈரோடு

பெருந்துறையில் கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

DIN

பெருந்துறை வட்டார சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் 150 கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, திங்களூா் வட்டார ஆரம்ப சுகாதார மருத்துவா் இசை ஆனந்த் தலைமை வகித்தாா். குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சூா்யா வரவேற்றாா். பெருந்துறை திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் கே.பி.சாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடக்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, கா்ப்பிணி பெண்களுக்கு சீா்வரிசைகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன், பெருந்துறை வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் பால் சின்னசாமி, பெருந்துறை ஒன்றியக்குழு உறுப்பினா் செந்தில்குமாா், கிராம ஊராட்சித் தலைவா்கள் சுள்ளிப்பாளையம் தேவேந்திரமாணிக்கம், சீனாபுரம் சுதா, சின்னவீரசங்கிலி, கண்ணம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT