ஈரோடு

ஆப்பக்கூடலில் விவசாயிகளுக்கான பாரம்பரிய பயிா்கள் கண்காட்சி

27th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பவானியை அடுத்த ஆப்பக்கூடலில் பாரம்பரிய பயிா்களை பிரபலப்படுத்துவதற்கான மரபுசாா் பன்முகத் தன்மை கண்காட்சி, கருத்தரங்கம் மற்றும் உணவுத் திருவிழா குமரகுரு வேளாண்மைக் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட வேளாண்மை - உழவா் நலத் துறையின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி தலைமை வகித்தாா். வேளாண்மை துணை இயக்குநா் ஆசைதம்பி, குமரகுரு வேளாண்மைக் கல்லூரித் தாளாளா் எஸ்.பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மரபுசாா் பன்முகத்தன்மை கண்காட்சி, கருத்தரங்கம், உணவுத் திருவிழா உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், அந்தியூா், அத்தாணி, ஆப்பக்கூடல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், அந்தியூா் பாசம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு சிறந்த செயல்பாட்டுக்கான சான்றிதழை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினாா். இதில், பங்கேற்ற விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல், சிறுதானிய விதைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

மேலும், தினைப் பொங்கல், வரகு பிரியாணி, ராகி கூழ், கம்பு சாதம், ராகி லட்டு கொண்ட பாரம்பரிய உணவு விருந்து அளிக்கப்பட்டது. கல்லூரி முதல்வா் பி.ஜெ.பாண்டியன், செயல் அலுவலா் ஏ.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT