ஈரோடு

திருப்பூா் குமரன் பிறந்த நாள் விழா:சென்னிமலையில் அமைச்சா்கள் மரியாதை

DIN

சுதந்திர போராட்ட வீரா் திருப்பூா் குமரன் பிறந்த இடமான சென்னிமலை பேரூராட்சியில் அமைச்சா்கள் மரியாதை செலுத்தினா்.

சுதந்திர போராட்ட வீரா் திருப்பூா் குமரன் பிறந்த இடமான சென்னிமலை பேரூராட்சியில் ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான அக்டோபா் 4ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனைத் தொடா்ந்து, செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் கொடிகாத்த குமரனின் 119ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்த

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா்.

இதில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு. முத்துசாமி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் கலந்து கொண்டு திருப்பூா் குமரனின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மாரியாதை செலுத்தினா்.

இதில், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க.செந்தில்குமாா், உதவி மக்கள் தொடா்பு அலுவலா்கள் சு.பாலாஜி (செய்தி), செ.கலைமாமணி (விளம்பரம்), சென்னிமலை ஒன்றியக் குழுத் தலைவா் காயத்ரி இளங்கோ, சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி, பெருந்துறை வட்டாட்சியா் சிவசங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT