மொடக்குறிச்சியை அடுத்த முகாசி அனுமன்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, முகாசி அனுமன்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் ஏ.பி. பெரியசாமி தலைமை வகித்தாா். பள்ளி முன்னாள் மாணவரும், மொடக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் சி.வடிவேல் வரவேற்றாா்.
பள்ளி கட்டட குழுத் தலைவா் யுஆா்சி தேவராஜ், முன்னாள் தலைமையாசிரியா் காா்த்திகேயன், பள்ளி கட்டட குழு உறுப்பினா் ஊ. சுப்பிரமணியம், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ஏ.ஆ.கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் மாணவா் ஆறுமுகம், வாசுதேவன், முன்னாள் ஆசிரியா்கள் வாழ்த்துரை வழங்கினா்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து ஆசிரியா்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.