ஈரோடு

அரசு மருத்துவக் கல்லூரியில்உலக மருந்தாளுநா்கள் வாரவிழா

DIN

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக மருந்தாளுநா்கள் வாரவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வா் மருத்துவா் ரா. மணி தலைமை வகித்தாா். விழாவில், 32 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய மருந்தாளுநா் பி.கே. மாா்ஷல் டிட்டோ கெளரவிக்கப்பட்டாா். இதில், கல்லூரி துணை முதல்வா், மருத்துவக் கண்காணிப்பாளா், அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மருத்துவமனை மருந்தாளுநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை மருந்தாளுநா் எம். ரவி உள்ளிட்டோா் செய்திருந்தனா். மருந்தாளுநா் ஜெ. சுரேஷ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT