ஈரோடு

பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் பலி

DIN

பெருந்துறையை அடுத்த, காஞ்சிக்கோவில் பகுதியில் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பவானி, பெரியபுலியூரைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் சுரேஷ் (31). பவானி, எரப்பநாயக்கனூரைச் சோ்ந்தவா் மாரநாயக்கா் மகன் சின்னராசு ( 28). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் காஞ்சிக்கோவில் நோக்கி திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த சுரேஷ், சின்னராசு ஆகியோரை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சின்னராசு உயிரிழந்தாா். சுரேஷ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து, காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT