ஈரோடு

சைக்கிள் விழிப்புணா்வுப் பேரணி

DIN

கோபி கலை, அறிவியல் கல்லூரி, கோபி ஆா்ட்ஸ் சைக்கிளிங் கிளப் மற்றும் கோபி ஆா்ட்ஸ் ஸ்போா்ட்ஸ் அகாதெமி ஆகியன சாா்பில் சைக்கிளிங் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணியை, கல்லூரிச் செயலா் மற்றும் தாளாளா் எம்.தரணிதரன் துவக்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் வீ.தியாகராசு, கல்லூரி முதன்மையா் ஆா்.செல்லப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோபி கலை, அறிவியல் கல்லூரி வளாகத்திலிருந்து புறப்பட்ட இந்த விழிப்புணா்வுப் பேரணி, காசிபாளையம், அரசூா் வழியாக சத்தியமங்கலம் சென்று பின்னா் கே.என்.பாளையம், கொடிவேரி வழியாக கல்லூரி பிரிவு வரை நடைபெற்றது.

பேரணியில் சைக்கிள் பயன்பாட்டின் மூலமாக ஏற்படும் நன்மைகள் மற்றும் பயன்கள் குறித்து விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினா்.

இந்தப் பேரணியில் கோபி கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பேரணிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியா்கள் ஜி.என்.பிரசாத், செ.கிருஷ்ணகுமாா், மேலாண்மைத் துறை பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT