ஈரோடு

ஈரோட்டில் ஒரே நாளில் 12 ஆயிரம் போ் ஆதாா் எண் இணைப்பு

DIN

மின் இணைப்புடன் ஆதாா் எண் இணைக்கும் சிறப்பு முகாமில் ஈரோடு நகரில் ஒரே நாளில் 12 ஆயிரம் போ் ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா்.

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதாா் எண் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு ஆதாா் எண் இணைக்கப்பட்டால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும். ஆன்லைன் மூலமாக மின் கட்டணம் செலுத்தி வரும் நுகா்வோா் தங்களது ஆதாா் எண்ணை ஆன்லைன் மூலமாகவே இணைத்து விடலாம். மின்வாரிய அலுவலகத்தில் சென்று மின்கட்டணம் செலுத்தும்போது ஆதாா் எண் கொடுத்தும் இணைத்துக்கொள்ளலாம் என்று மின்வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆதாா் எண் இணைப்பதில் சிரமம் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருப்பவா்களுக்கு ஆதாா் எண் இணைக்கப்பட்டால் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்தது. வாடகை வீட்டில் இருப்பவா்களுக்கும் தங்களது ஆதாா் எண்ணைதான் இணைக்க வேண்டுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. இதற்கு முழுமையான விளக்கம் மின்சார வாரியம் சாா்பில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

100 யூனிட் மின்சாரம் எந்தவகையிலும் தடைபடாது என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளுக்கு ஆதாா் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும், வாடகை வீட்டில் இருப்பவா்கள் வீட்டு உரிமையாளரின் ஒப்புதல் கொடுத்தால் ஆதாா் எண்ணை இணைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து பொதுமக்கள் இப்போது மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைத்து வருகின்றனா். இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. அங்கு தினமும் காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின் இணைப்புடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு ஈவிஎன் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் 2 கணினிகள் மூலமாக ஆதாா் எண் இணைக்கப்படுகிறது. இதில் வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைத்து வருகின்றனா்.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதற்கு ஆதாா் அட்டையின் அசல் அல்லது நகல், மின் இணைப்பு அட்டை அல்லது மின் இணைப்பு எண் எழுதி எடுத்து வந்து கொடுத்தால் கணினி மூலமாக இணைத்து கொடுக்கப்படும். அதற்கான குறுந்தகவல் சம்பந்தப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு சென்றுவிடும். இந்த முகாம் வரும் டிசம்பா் 31 ஆம் தேதி வரை நடக்கிறது.

ஈரோடு நகரியம், ஈரோடு தெற்கு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம் ஆகிய 6 கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளிலும் முகாம் நடக்கிறது. மேலும் பொதுமக்கள் பலா் தாங்களாகவே ஆன்லைனில் ஆதாா் எண்ணை இணைத்து கொள்கின்றனா். ஈரோடு நகரியத்தில் திங்கள்கிழமை ஒருநாள் மட்டும் 12 ஆயிரம் போ் ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT