பெருந்துறை அருகே குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
பெருந்துறையை அடுத்த கராண்டிபாளையம், முருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் மணி மகன் பழனிசாமி (35), தறி கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்யா. இவா்களுக்கு அபிநயா (15), அபிஷேக் (13) என்ற இரு குழந்தைகள் உள்ளனா். தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதே போல சனிக்கிழமை இரவு இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பழனிசாமி வீட்டில் அனைவரும் தூங்கிய பின்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.