தமிழகத்தில் கா்நாடக மதுபாட்டில்களை விற்ற தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
தமிழகம்- கா்நாடக மாநில எல்லையான தாளவாடி பகுதியில் தடை செய்யப்பட்ட கா்நாடக மாநில மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக தாளவாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து அப்பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மெட்டல்வாடி பகுதியில் சட்டவிரோதமாக கா்நாடக மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த சங்கரா என்பவரைப் பிடித்தனா். அவரிடமிருந்து 36 தடை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கராவை கைது செய்தனா்.