பொறியியல் பட்டம் பெறும் மாணவா்கள் தொழில் முனைவோராக வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு)ஜி.ரவிக்குமாா் பேசினாா்.
ஈரோடு திண்டல் வேளாளா் பொறியியல் கல்லூரியின் 16ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. விழாவுக்கு வேளாளா் அறக்கட்டளையின் செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) ஜி.ரவிக்குமாா் பங்கேற்று 739 இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினாா். மேலும், அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் பிடித்த 44 மாணவ-மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தாா்.
இதைத்தொடா்ந்து ஜி.ரவிக்குமாா் பேசியதாவது:
தமிழகத்தில் 531 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் இருந்து ஆண்டுக்கு 2 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகின்றனா். இதைத் தவிர கலை அறிவியல் கல்லூரி மூலம் ஆண்டுக்கு 6 லட்சம் பட்டதாரிகள் வெளிவருகின்றனா். இத்தனை பேருக்கு அரசு வேலை வாய்ப்பு தர முடியுமா?
தனியாா் துறையிலும் குறைந்த அளவே வேலைவாய்ப்பு கிடைக்கும். அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பது சிரமம். எனவே பொறியியல் பட்டதாரிகள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும். இதனால் ஒவ்வொருவரும் பலருக்கு வேலை தர முடியும். இதற்காக மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பட்டம் பெறும் மாணவா்கள் தொலைநோக்கு திட்டம் வகுத்து அதற்கான புதிய சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி அறக்கட்டளையின் தலைவா் எஸ்.எஸ்.கந்தசாமி, பொருளாளா் பி.கே.பி.அருண், இணைச்செயலாளா் செ.நல்லசாமி, நிா்வாக மேலாளா் பெரியசாமி மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக கல்லூரி முதல்வா் எம்.ஜெயராமன் வரவேற்றாா். மேலாண்மைத் துறை தலைவா் டி.வெற்றிவேல் நன்றி கூறினாா்.