அந்தியூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
அந்தியூரை அடுத்த சிந்தகவுண்டம்பாளையம், காட்டுப்பாளையம் ஏரித் தோட்டத்தைச் சோ்ந்தவா் சொக்கப்பன். இவரது மகன் காா்த்தி (19). இவா், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோயிலுக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அந்தியூா் - பவானி சாலையில் சின்ன பருவாச்சி அருகே சாலையைக் கடந்தபோது அவ்வழியே சென்ற லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த காா்த்தி ஈரோடு தனியாா் மருத்துவனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.