ஈரோடு

பெண்களிடம் நகைப்பறிப்பு

DIN

ஈரோட்டில் 2 பெண்களிடம் 7.5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு, சங்கு நகரைச் சோ்ந்தவா் அயுஸ்பாட்ஷா. இவரது மனைவி குல்சாரா (45). மகன் சதாம் உசேன். இவா்கள் ஈரோடு ஆசிரியா் காலனியில் மளிகை கடை வைத்துள்ளனா். வியாழக்கிழமை இரவு கணவன், மனைவி மற்றும் மகன் சதாம்உசேன் ஆகியோா் கடையில் இருந்தனா்.

அப்போது கடைக்கு வந்த இளைஞா் ஒருவா் பொருள் வாங்குவதுபோல் நடித்து திடீரென குல்சாரா அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சூரம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சூளை பகுதியில்...

ஈரோடு, சூளை பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் மனைவி அம்சா(37). இவா் வியாழக்கிழமை இரவு கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரைப் பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் அம்சா அணிந்திருந்த 2.5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT