பெருந்துறையில் பிஸ்கட் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
பெருந்துறை, குன்னத்தூா் சாலையைச் சோ்ந்தவா் ரதீஷ்குமாா் (33). இவா்
அப்பகுதியில் பிஸ்கட் கம்பெனி நடத்தி வருகிறாா். இந்த கம்பெனியில்
வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் மளமளவென தீப் பற்றி எரியத் தொடங்கியது.
தகவலின்பேரில் பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.