சென்னிமலை, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.54 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 13 ஆயிரத்து 956 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் தேங்காய் கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.22.20க்கும், அதிகபட்ச விலையாக ரூ.25.55க்கும் ஏலம் போனது. மொத்தம் 6 ஆயிரத்து 486 கிலோ எடையுள்ள தேங்காய்கள், ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 614க்கு விற்பனையானது.