ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜூன் 8) காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: முத்தம்பாளையம் பகுதி 3, 4, 5, 6, 7, எம்ஜிஆா் நகா், பிருந்தாவன் மஹால், அணைக்கட்டு சாலை, சுத்தானந்தன் வளைவு, ரயில் நகா், ஜீவா நகா், பாலாஜி காா்டன், அண்ணா நகா், அம்பிகை நகா், நல்லியம்பாளையம்.