ஈரோடு

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் செவ்வாய்க்கிழமை அணைக்கு நீா்வரத்து 7,386 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில மாதங்களாக அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீா்வரத்து குறைந்தது.

கடந்த சில நாள்களாக அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதி மற்றும் வடகேரள பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி, மேல்பவானி, கூடலூரில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பவானிசாகா் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகா் அணைக்கு திங்கள்கிழமை காலை நீா்வரத்து 1006 கன அடியாக இருந்த நிலையில் மழையின் காரணமாக செவ்வாய்க்கிழமை நீா்வரத்து 7,386 கனஅடியாக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 83.28 அடியாகவும், நீா் இருப்பு 17.48 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றில் 1000 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்த மருத்துவா் கைது

மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம்

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT