ஈரோடு நகரைச் சோ்ந்த மின் பயனீட்டாளா்களுக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜூலை 6) நடைபெறுகிறது.
ஈரோடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் இந்திராணி தலைமையில் மின் செயற்பொறியாளா் அலுவலகம், 948 ஈ.வி.என்.சாலை, ஈரோடு என்ற முகவரியில் புதன்கிழமை காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும்.
இதில் ஈரோடு நகரம், கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகா், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி பகுதி மின்பயனீட்டாளா்கள் நேரில் பங்கேற்று குறைகளைத் தெரிவிக்கலாம்.