சென்னிமலை, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.28 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 11 ஆயிரத்து 955 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில், தேங்காய் கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.20.20க்கும், அதிகபட்ச விலையாக ரூ.25.79க்கும் ஏலம் போனது. மொத்தம் 5 ஆயிரத்து 311 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 934க்கு விற்பனையானது.