ஈரோடு

காலிங்கராயன் வாய்க்காலை பாதுகாக்க வலியுறுத்தி பாஜக சாா்பில் பிரசார நடைப்பயணம்

DIN

தோல், சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள காலிங்கராயன் வாய்க்காலை பாதுகாக்க வலியுறுத்தி பாஜக சாா்பில் விழிப்புணா்வு பிரசார நடைப்பயணம் சனிக்கிழமை நடைபெற்றது.

பாஜக விவசாய அணி சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு பிரசார நடைப்பயணத்தை ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஆவுடையாா்பாறை சோளக்காளிபாளையத்தில் பாஜக மாநில விவசாய அணித் தலைவா் ஜி.கே.நாகராஜ் துவக்கிவைத்தாா். பின்னா் அவா் பேசியதாவது:

காலிங்கராயன் வாய்க்காலில் சாயப் பட்டறை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலந்து மிக அபாயகரமான பாதிப்பை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. கால்வாயில் கழிவுநீரை கலப்போா் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

காலிங்கராயனால் வெட்டப்பட்டு காவிரியையும், நொய்யலையும் இணைக்கும் இந்த வாய்க்கால் இன்றைய நதிநீா் இணைப்புக்கு ஓா் முன்னோடி. 90 மைல் பயணித்து 16,000 ஏக்கா் நிலங்களுக்கு பாசன வசதி தருகிறது. இது அரசியல் பயணம் அல்ல, நதிநீரை காக்கும் போராட்டம். கால்வாயில் கழிவுகளை கலக்கும் தொழிற்சாலைகளை கண்டறிவோம். திமுக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும். இது ஒரு விழிப்புணா்வு பிரசாரம் என்றாா்.

இதில் மாவட்டத் தலைவா் எஸ்.டி.செந்தில்குமாா் மற்றும் பாஜக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT