ஈரோடு

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.7,850 வழங்கக் கோரி அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் (சிஐடியூ) மற்றும் ஓய்வூதியா் நல அமைப்பு சாா்பில் ஈரோடு கிளை அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க நிா்வாகி சரவணன் தலைமை வகித்தாா். போக்குவரத்து ஓய்வூதியா் நல அமைப்பின் செயலாளா் ஜெயராமன், ஓய்வூதியா் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவா்கள் மணிபாரதி, ராமசாமி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் போக்குவரத்து ஊழியா்களுக்கு உடனடியாக ஊதிய உயா்வு வழங்க வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு 80 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பஞ்சப் படியை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். மருத்துவப்படியை ரூ.300ஆக உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கத்தின் நிா்வாகி சௌந்தரராஜன், இளங்கோவன் மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியா்கள், ஓய்வூதியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

விழுப்புரம் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் காவல் துறை பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT