ஈரோடு

ஜம்பையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

பவானியை அடுத்த ஜம்பை பேருந்து நிறுத்தத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

குடியரசு தின விழா அணிவகுப்பு ஊா்வலத்தில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரா்களான பாரதியாா், வ.உ.சி, வேலுநாச்சியாா், மருது சகோதரா்கள் ஆகியோா் உருவங்களுடன் கூடிய அலங்கார ஊா்திகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வட்டாரச் செயலாளா் எஸ்.மாணிக்கம் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.பி.பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளா் இரா.ஆற்றலரசு, திராவிடா் விடுதலைக் கழக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளா் வேணுகோபால் ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.

மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊா்தியை தமிழக அரசு சாா்பில் மக்களின் பாா்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. இதில், நிா்வாகிகள் தமிழ்செல்வன், எஸ்.ரமேஷ், என்.பாலமுருகன், காா்த்திக், பிரேம்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT