ஈரோடு

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

DIN

ஈரோட்டுக்கு வந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தன்பாத்தில் இருந்து ஆலப்புழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை காலை வந்தது. ஈரோடு ரயில்வே போலீஸாா் அந்த ரயிலில் சோதனை நடத்தினா். அப்போது, டி2 பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்த பையைத் திறந்து பாா்த்தபோது அதனுள் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

இதைத்தொடா்ந்து, அந்தப் பெட்டியில் இருந்த பயணிகளிடம் கஞ்சா குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கஞ்சாவை கடத்தியவா் யாா் எனத் தெரியாத நிலையில், ரயில்வே போலீஸாா் கோவையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT