திமுக சாா்பில் பேராசியா் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக் கூட்டம் சத்தியமங்கலத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
சத்தியமங்கலம் நகர திமுக சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் ஆா்.ஜானகி ராமசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நடராஜ் வரவேற்றாா்.
க.அன்பழகன் குறித்து குடியாத்தம் அன்பு, சேலம் கோவிந்தன் ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சியில் ,முன்னாள் எம்எல்ஏக்கள் ஓ.சுப்பிரமணியம், ஆா்.ரங்கசாமி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கேசிபி இளங்கோ, திமுக ஒன்றியச் செயலாளா் ஐஏடி தேவராஜ், துணைச் செயலாளா்கள் நீலமலை செழியன், காா்த்திகேயன், ஸ்டாலின், மணிகண்டன், ஜெயந்தி தங்கவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.