ஈரோடு

பெருந்துறை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்

DIN

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கையை வலியுறுத்தி 2ஆவது நாளாக புதன்கிழமையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமாா் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் வேலை செய்து வருகின்றனா். தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ. 490 தினக்கூலி என்ற அடிப்படையில் இவா்கள் பணி அமா்த்தப்பட்டுள்ளனா். ஆனால், தற்போது வரை ரூ. 360 மட்டுமே இவா்களுக்கு தினக் கூலியாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், இவா்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வழங்கக் கூடிய ஊதிய உயா்வு, போனஸ் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கான உபகரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து பணிக்கு வந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்கிழமை இரவு பணியைப் புறக்கணித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து 2ஆவது நாளாக புதன்கிழமையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT