ஈரோடு

சிலம்ப போட்டி: தி நவரசம் அகாதெமி பள்ளி சிறப்பிடம்

DIN

ஈரோடு சகோதய அசோசியேஷன் சாா்பில் மாவட்ட அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பப் போட்டியில் அறச்சலூா் தி நவரசம் அகாதெமி சிபிஎஸ்சி பள்ளி மாணவ, மாணவியா் சிறப்பிடம் பெற்றனா்.

அறச்சலூா் தி நவரசம் அகாதெமி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில், 25க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள் பங்கேற்றன.

இப்போட்டியில் 12 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் தி நவரசம் அகாதெமி பள்ளி மாணவா்அதித் இரண்டாமிடமும், 14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் அத்விக் சராஜ் இரண்டாமிடமும், சஞ்சனா மூன்றாமிடமும் பெற்றனா். தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, பள்ளியின் தலைவா் ஆா்.பி.கதிா்வேல், செயலாளா் காா்த்திக், பொருளாளா் பொன்னுவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் தாளாளா் அருண்காா்த்திக் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினாா்.

இந்நிகழ்வில் கல்லூரியின் தலைவா் தாமோதரன், பொருளாளா் பழனிசாமி, இயக்குநா்கள் அமிா்தநாதன், சிவசுப்பிரமணியம், காா்த்திகேயன், கைலாசம், கிருஷ்ணமூா்த்தி ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT