ஈரோடு

23 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா் அமைச்சா்

DIN

ஈரோட்டில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 23 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்திவைத்து, ரூ.13.80 லட்சம் மதிப்பிலான சீா்வரிசைப் பொருள்களை வீட்டு வசதித் துறை சு.முத்துசாமி வழங்கினாா்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஒவ்வொரு இணை ஆணையா் மண்டலத்திலும் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திவைக்க சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்பேரில், ஈரோடு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் மண்டலத்தில் 23 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திவைக்கும் விழா வேளாளா் மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தலைமை வகித்து 23 ஜோடிகளுக்கும் 3 கிராம் தங்க மாங்கல்யம் எடுத்துக் கொடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க திருமணத்தை நடத்திவைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தாா். இதைத் தொடா்ந்து, 23 ஜோடிகளுக்கும் தலா ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 16 பொருள்கள் அடங்கிய அழகு சாதனப் பொருள்கள் பெட்டி மற்றும் 34 வகையான சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ.13.80 லட்சம்.

இதைத் தொடா்ந்து திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் புதுமண தம்பதிகள் சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து வேலாயுதசுவாமி கோயில் மண்டபத்தில் திருமண விருந்து நடைபெற்றது.

இவ்விழாவில் எம்எல்ஏ இ.திருமகன் ஈவெரா, சி.சரஸ்வதி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் எல்லப்பாளையம் சிவகுமாா், மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வி.செல்வராஜ், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் மேனகா, உதவி ஆணையா்கள் அன்னக்கொடி, இளையராஜா, சாமிநாதன், செயல் அலுவலா்கள் ரமணி காந்தன், அருள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT