அறச்சலூா் வினோபா நகா் துணை விற்பனைக் கூடத்தில் ரூ. 47 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் மொடக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 4, 862 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா். இவற்றின் எடை 1, 771 கிலோ.
இதில், தேங்காய் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.29.66க்கும், குறைந்தபட்சமாக ரூ. 23.69க்கும், சராசரியாக ரூ. 28.19க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.47 ஆயிரத்து 341 என விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.