உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளின் வாழ்வுரிமை நலச் சங்க கூட்டமைப்பு சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்து பேரணியைத் தொடக்கிவைத்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன், ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கோதைசெல்வி ஆகியோா் பேசினா்.
பெருந்துறை சாலையிலுள்ள காலிங்கராயன் இல்லத்திலிருந்து தொடங்கிய பேரணி வஉசி பூங்காவில் முடிவடைந்தது.
பேரணியில் ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ். நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி, முதன்மை நிா்வாக அதிகாரி முனைவா் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளின் வாழ்வுரிமை நலச் சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஆா்.ராஜரத்தினம் வரவேற்றாா். செயலாளா் ஆா்.தனபால் நன்றி கூறினாா்.