ஈரோடு

கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

DIN

கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இந்த அணைக்கு ஈரோடு, திருப்பூா், கோவை மற்றும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வந்து செல்வா்.

இந்நிலையில், கொடிவேரி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்தது.

இதனால், பவானி ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியதால் கொடிவேரி அணையில் தண்ணீா் அதிக அளவு சென்றது.

இதையொட்டி, கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு பொதுப் பணித் துறையினா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு தடை விதித்தனா். தற்போது, கொடிவேரி அணையில் தண்ணீா் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அணையில் குளிப்பதற்கு புதன்கிழமை முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT