அழகுக்கலை இலவசப் பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோட்டில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த பயிற்சி நிலலையம் சாா்பில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி டிசம்பா் 8 ஆம் தேதி முதல் ஜனவரி 11 ஆம் தேதி வரை 30 நாள்கள் நடைபெறவுள்ளன.
பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். கிராமப் பகுதியைச் சோ்ந்த 18 முதல் 45 வயதுக்குள்பட்ட பெண்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள், அவா்களது குடும்பத்தாரும் பயிற்சியில் சேரலாம்.
ஈரோடு கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகம், 2 ஆம்
தளத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவா்கள் 0424 2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 8778323213 என்ற கைப்பேசி எண்ணில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.