சென்னிமலை வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 16 ஆயிரத்து 167 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 7 ஆயிரத்து 699 கிலோ.
இதில், தேங்காய் அதிகபட்சமாக ரூ.32.49க்கும், குறைந்தபட்சமாக ரூ.24.01க்கும் விற்பனையானது.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 173 என விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.